C. SHANTHI - சுயவிவரம்
(Profile)


பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : C. SHANTHI |
இடம் | : CHENNAI |
பிறந்த தேதி | : 07-Jun-1963 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Oct-2011 |
பார்த்தவர்கள் | : 11736 |
புள்ளி | : 5448 |
இலக்கியம் படிக்கவில்லை. இருந்தும் கவிதை எழுதும் ஆசையில் இங்கே என் கிறுக்கல்கள்....
##ஆட்சியாளருக்கு ஓர் கடிதம்
மாண்புமிகு ஆட்சியர்க்கு வணக்கத்துடன் வாழ்த்து
நல்லாட்சி புரிந்திடணும் நாட்டுமக்களையே காத்து
நீதி நேர்மை நாட்டினிலே நிலவிட வேண்டும்
அந்த நேர்மையிலே நாடுயர்ந்து ஒளிர்ந்திட வேண்டும்..!
ஆரம்ப கல்விக் கூடம் ஆயிரந்தான் இருந்தும்
ஆகவில்லை இன்னுந்தான் ஏழைக்கு கல்வி சொந்தம்
கடைவிரித்து பேரமும்தான் தேர்வு முடிவு நாளில் - கல்வி
கைவிரிக்க கண்ணீர்தான் ஏழைகளின் கண்ணில்..!!
எத்தனையோ இலவசங்கள் தருவதெல்லாம் வீணே
கல்வி இலவசந்தான் ஏழைக்கென்று ஆகட்டுந்தான் உடனே
கல்வி விற்போர் முகவரையே கண்டறிய வேண்டும்
கைவிலங்கு பூட்டியவரை சிறைபிடிக்க வேண்டும்..!
கள்ளு
#மானுட தெய்வம் மாதரி
விதியின் சீற்றம் புயலைப் போன்றே
சுழன்றடித்தது கோவலன் வாழ்வில்
விரட்டியும் அடித்தது வீதி வீதியாய்
புரட்டிப்போட்டது மரணம் வரையில்..!
ஆய்ந்தறியா விற்பனை வழக்கில்
அநி யாயத்தீர்ப்பு கோவலனுக்கு
கள்வன் என்ற குற்றச்சாட்டில்
மரண தண்டனை மாய்த்தது உயிரை..!
விதியை சபித்தாள் வெறுப்பில் கண்ணகி
வெகுண்டு எழுந்தாள் பேரலைப் போன்றே
மாணிக்கப் பரலென் காற் சதங்கை
மெய்ப் பித்தப்பின்னுயிர் மீட்கவா இயலும்..?
கட்டிய கணவன் மாண்ட சேதியில்
முட்டியழுதாள் முகம்கண் சிவந்தாள்
கடுஞ்சினம் கொண்டாள் காளியுமானாள்
கோவலன் பிரிவில் மதுரையை எரித்தாள்..!
அடைக்கலம் அளித்தவள் ஆயர
#வேண்டும் யாவையும் வேண்டும்..!
மனிதம் மறந்த மண்ணில்
மறுபடி வேண்டும் மனிதம்
புனிதம் இழந்த புவியில்
புத்தன் வேண்டும் வேண்டும்..!
காயும் கனியும் உண்டு
களித்தக் காலம் வேண்டும்
பாயில் படுத்து உறங்க
நோயற்ற வாழ்வு வேண்டும்..!
மஞ்சள் வண்ணம் முகத்தில்
மங்கை காண வேண்டும்
தொற்றுக் கிருமி யாவும்
தோல்வி காண வேண்டும்..!
கூட்டுக் குடும்ப மெங்கும்
கொண்டாடி மகிழ வேண்டும்.
இன்ப துன்பம் பகிரும் - அந்த
இனிய வாழ்வு வேண்டும்..!
தோப்புப் போன்ற வாழ்வில்
பசுமை காண வேண்டும்
மூப்புக் கண்ட போதும்
முனகா சேவை வேண்டும் .!
தாக மென்று வந்தால்
தணிக்கும் மக்கள் வேண்டும்
சோகம் நீங்கிய வாழ்வி
கட்டை விரல்
குட்டை விரலென எண்ணாதீர்
கூட்டு விரலுக்குப் பிடிமானம்
பட்டையைக் கிளப்பும்
பலவழியில்
பாட்டுக்குத் துணையாம் இசைவழியில்..!
அசைக்க வியலா
தெனஅசையும்
அதுவே வெற்றியில் தலைநிமிரும்
இசைந்து சாயும் நால்விரலில்
இணக்கம் ஆகும் கூட்டுறவில்..!
எழுத்தே அறியா பேர்களுக்கு
இட்டு வைக்கும் கையொப்பம்
கழுத்தை நெறிக்கும் கள்வனுக்கு
கருணை மறந்து கைகொடுக்கும்..!
ஏக லைவன் கதையறிவோம்
ஈந்தான் பெருவிரல்
துரோணர்க்கு
சோகம் கூட்டும் அநியாயம்
துரோக மிழைத்தார் வீரனுக்கு..!
கண்ணில் கண்ணீர் மல்கிட
காணிக்கை யானது கட்டைவிரல்
மண்ணில் வீரன் திறமழிக்க
மடியச் செய்தார்
கட்டைவிரல்..!
#விலைக்குறைப்பு..
கண்துடைப்பு.!
போராட்டம் விலைகுறைக்க
நடத்தினாலும்
பொல்லாத அரசாங்கக்.. .
குள்ளநரி
நாருரிக்கக் கல்தானே
நாமறிவோம்
நாணயந்தான் காணவில்லை
நரியிடத்தில்..!
பத்து ரூபாய் விலையேற்றி
பதைக்கச்செய்து
பாவிகள் குறைத் திடுவார்
ஒன்றிரண்டு
கத்தித்தான் ஓய்ந்து விட்டோம்
காலங்காலம்
கயவர்கள் மாறவில்லை
கள்ளம்மேலும்..!
மக்களின் உழைப்பினைச்
சுரண்டிநித்தம்
மாபணந்தான் சேர்த்துவிட்டார்
கார்ப்பரேட்டும்
சிக்கலில் உழலும் மக்கள்
விடுபட்டுத்தான்
சிறப்புடனே வாழும்நாள்
வந்திடனும்..!
பாதிவிலை மீதிவரி
பகற் கொள்ளையாய்
பாவிகளின் ஆட்சிதரு
அதிகாரத்தில்
மோதித்தான் பார்த்திடலாம்
#சிந்து வகைப் பாடல்
#(கிளிக்கண்ணி)
கண்ணில் நிறைந்தவளே காட்சியெலாம்
நீயானாய்
மண்ணும் மறையுதடி - கிளியே
மையல் பெருகுதடி..!
காதல் பழுத்திருக்கக் காத்திருக்கேன் தாமதமேன்
நோதல் நொறுக்குதடி - கிளியே
நோய்க்கூடிக் கொல்லுதடி..!
சித்திரம் போலுன்னை சிந்தைதனில் வைத்தேன்
கத்திக் கதறுதடி - ,கிளியே
கண்முன்னே தோன்றிடடி..!
சாதியினால் கொல்லி சதியினால் கொல்லி
பாதிஉயிர் போனதடி - கிளியே
பட்டமரம் ஆவதோடி..!
செங்குருதி விழிதனிலே சேர்ந்திருந்து ஊற்றாகி
பொங்கி வழியுதடி - கிளியே
புத்தி பிசகுதடி..!
மென்தென்றல் நிலைமாறி மேனிதனைத் தீண்டிடுதே
என்னில்தீ பரவுதடி - கிளியே
எரிதழல் ஆவேனோடி..!
#தமிழே தவமெமக்கு….!
இந்தியைத்தான் கந்தலாக்கும்
எங்கள் தமிழ்க்கூட்டம்
மந்தியிங்கு ஆட்டமிட்டால்
நையத்தானே புடைக்கும்..!
வெந்தமொழி வேற்றுமொழி
வேட்டையாடி யழிப்போம்
நிந்தனைகள் செய்யுமென்றால்
நெற்றிப்பொட்டில் அடிப்போம்..!
சந்தனத்தின் வாசமிகு
செந்தமிழைப் படிப்போம்
இந்தித்தலை நீட்டுமென்றால்
எட்டியெட்டி உதைப்போம்..!
செங்கரும்பு சாறிருக்க
சித்தங்குளிரக் குடிப்போம்
சிங்கமொழி எங்கள்தமிழ்
எந்நாளும் கர்ஜிப்போம்..!
வடமொழியும் முடமொழியும்
தொடைநடுங்க வைப்போம்
திடத்தமிழை தேன்தமிழை
திகட்டத்திகட்டப் படைப்போம்..!
இற்றுப்போன இந்தியெதற்கு
இடுகாட்டுப் பிணமே
பற்றுடனே வணங்கிடுவோம்
ப
#அத்தை
தந்தையுடன் பிறந்தவளைத் தாய்தான் என்பேன்
சந்திரனாய் எங்கள்வான் சுந்தர
மென்பேன்
வள்ளியென்பார் பலருக்கும் அவளே
அத்தை
வழங்கிட்டார் கடவுளந்த அன்புச்
சொத்தை.
அல்லும்பகல் உறங்காது காத்து நிற்பாள்
ஆராரோ பாடித்தான் தூங்க வைப்பாள்
தொட்டிலிலே ஆட்டிடுவாள் சுகமாய் அத்தை
கட்டிலென ஆக்கிடுவாள் மடியும் மெத்தை
முனிக்கதைகள் கூறிடுவாள் முகமும் சுருக்கி
மூங்கில் காட்டில் கண்டதுவாய்
பயமும் பெருக்கி
விழிப்பிதுங்கக் கேட்போமே வெடவெ டத்து
கழித்திடுவோம் காலமதைக் கிறுகி றுத்து. !
வக்கணையாய் சமைப்பாளே வாசந் தூக்கும்
வஞ்சிரமும் நண்டுஇறால் வாளை ருசிக்கும்
கைகளுக்குள் பக்குவந்
கவி அரங்கில் கவிதை வாசிக்க விருப்பமுள்ளவர்களுக்காக....
"கவி ஓவியா" மாத இதழ் நடத்தும் கவி அரங்கம் நாளை சென்னையில் நடை பெற இருக்கிறது. விருப்பமுள்ள சென்னை வாசிகள் பங்கு பெறலாம். விவரங்கள் பின்வருமாறு.
நாள்--------------------------------------------> 15-03-2015
துவக்க நேரம்------------------------------> காலை 9.30 மணி
முகவரி---------------------------------------> வீரசுவர்கர் மேல்நிலைப் பள்ளி, B.B. ரோடு, பெரம்பூர் நெடுஞ்சாலை,
---------------------------------------------------> சென்னை (...)
https://www.youtube.com/watch?v=GV8E90p7xkg
பூக்களோடு ஒரு கைக்குலுக்கல் ....
=================================
(சர்னா கவிதை வாசிப்பு போட்டி - கவிதை )
நவீன உலகில் நவீனங்களின் இடையில்
நாமும் இயந்திரங்களோடு இயந்திரங்களாய்
சிறிதேனும் சிந்திக்க மறந்தவர்களாய்...
நாளும் சிரிப்பை இழந்தவர்களாய்..
பொருள் தேடும் குறிக்கோளே இலக்காகி
உறவுகளை உதறி... திசைக்கு ஒருவராய்
வாழாத வாழ்க்கை நிதமுமாய்....
வாழ்கிறோமா என்பதனை மறந்து!!!
நாளும் தொடரும் மூச்சிறைப்பு ஓட்டங்களில்
உறவுகளையு (...)
எண்ணங்கள் மீறிய வண்ணம்
தளம் நாளும் மிளிர்ந்திடும் திண்ணம்
உலா வரும் சோலை இது மணக்கும்
உலகத்தில் உள்ளோரை நாளுமே ஈர்க்கும்
"எழுத்தின்" சேவைகளுக்கு நன்றி
தமிழை அதில் ஊன்றி வளர்போர்க்கும் நன்றி!!!